சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.027
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படையினார், வெண்மழு; பாய் புலித்தோல் பண் - கொல்லி (திருச்சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை) ஆலந்துறைஈசுவரர் அல்லியங்கோதையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=Qdw7TRf0eKk |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.027  
படையினார், வெண்மழு; பாய் புலித்தோல்
பண் - கொல்லி (திருத்தலம் திருச்சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை) ; (திருத்தலம் அருள்தரு அல்லியங்கோதையம்மை உடனுறை அருள்மிகு ஆலந்துறைஈசுவரர் திருவடிகள் போற்றி )
படையினார், வெண்மழு; பாய் புலித்தோல் அரை உடையினார்; உமை ஒரு கூறனார்; ஊர்வது ஓர் விடையினார்; வெண்பொடிப் பூசியார்; விரிபுனல் சடையினார்; உறைவு இடம் சக்கரப்பள்ளியே. | [1] |
பாடினார், அருமறை; பனிமதி சடைமிசைச் சூடினார், படுதலை துன் எருக்கு அதனொடும்; நாடினார், இடு பலி; நண்ணி ஓர் காலனைச் சாடினார்; வள நகர் சக்கரப்பள்ளியே. | [2] |
மின்னின் ஆர் சடைமிசை விரி கதிர் மதியமும், பொன்னின் ஆர் கொன்றையும், பொறி கிளர் அரவமும், துன்னினார்; உலகு எலாம் தொழுது எழ நால்மறை தன்னினார்; வள நகர் சக்கரப்பள்ளியே. | [3] |
நலம் மலி கொள்கையார், நால்மறை பாடலார் வலம் மலி மழுவினார், மகிழும் ஊர் வண்டு அறை மலர் மலி சலமொடு வந்து இழி காவிா சலசல மணி கொழி சக்கரப்பள்ளியே. | [4] |
வெந்த வெண் பொடி அணி வேதியர், விரிபுனல், அந்தம் இல் அணி மலைமங்கையோடு, அமரும் ஊர் கந்தம் ஆர் மலரொடு, கார் அகில், பல்மணி, சந்தினோடு, அணை புனல் சக்கரப்பள்ளியே. | [5] |
பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை வாங்கினார், வானவர் தானவர் வணங்கிட ஓங்கினார், உமை ஒரு கூறொடும் ஒலி புனல் தாங்கினார், உறைவு இடம் சக்கரப்பள்ளியே. | [6] |
பாரினார் தொழுது எழு பரவு பல் ஆயிரம்- பேரினார்; பெண் ஒரு கூறனார்; பேர் ஒலி- நீரினார், சடைமுடி; நிரை மலர்க்கொன்றை அம்- தாரினார்; வள நகர் சக்கரப்பள்ளியே. | [7] |
முதிர் இலா வெண்பிறை சூடினார்; முன்ன நாள எதிர் இலா முப்புரம் எரிசெய்தார், வரைதனால்; அதிர் இலா வல் அரக்கன் வலி வாட்டிய சதிரினார்; வள நகர் சக்கரப்பள்ளியே. | [8] |
துணி படு கோவணம், சுண்ண வெண் பொடியினர் பணி படு மார்பினர், பனிமதிச் சடையினர், மணிவணன் அவனொடு மலர் மிசையானையும் தணிவினர், வள நகர் சக்கரப்பள்ளியே. | [9] |
உடம்பு போர் சீவரர், ஊண்தொழில் சமணர்கள் விடம் படும் உரை அவை மெய் அல; விரிபுனல் வடம் படு மலர்கொடு வணங்குமின், வைகலும், தடம் புனல் சூழ்தரு சக்கரப்பள்ளியே! | [10] |
தண்வயல் புடை அணி சக்கரப்பள்ளி எம் கண் நுதலவன் அடி, கழுமல வள நகர் நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல் பண்ணிய இவை சொல, பறையும், மெய்ப் பாவமே. | [11] |